skip to main  |
      skip to sidebar
          
        
          
        

தமிழ் மாநாடுகள் 
எங்கும் பிரமாண்டமாய்...!
தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட 
தமிழனுக்கு இல்லையே? 
ஆம்..,  
தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்.. 
ஆனால்
தமிழன் வாழ...?
உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...
 
 
 
            
        
          
        
          
        

மல்லிகையும் மணக்க மறந்தது 
என் சுவாசம் நீ என்று ஆன பின்.. 
நல்ல கவிதையும் கசந்து போனது 
உன் பெயரை வாசித்த பின்..
                       -கவி
 
 
 

காதல் சுகமானது என்று கூறுகிறார்கள் 
என்னிடத்தில் மட்டும் 
ஏன் இப்படி வலிக்கிறது..!
                   -கவி
 
 
 


இமைக்க மறந்தேன் 
எதிரில் நீ..
விழிக்க மறந்தேன்
கனவிலும் நீ..!
 
 
 
            
        
          
        
          
        

நாட்டின் முதல் குடிமகன், வீட்டின் தலைப்பிள்ளை
பொறுப்புகளும் கடமைகளும் என்றும் அதிகம் 
ஆசைகளும் அவஸ்தைகளும் என்றும் அதிகம்
சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம் 
வயதுக்கே உரிய ஆசைகளால்
சிறு சண்டை முதல் பள்ளி கலாட்டா வரை முதல் ஆளாய் நான் 
குழாயடி ஓரம் நின்று, மாணவிகளை திருட்டுத்தனமாய் 
ரசித்தது முதல் என்றும் மறக்க முடியாத 
சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம்... 
வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய் 
என் கல்லூரி வாழ்க்கை 
ஆசிரியருக்கு அடங்காதவனாய் முதலாமாண்டு 
ஆழ்ந்த நட்புகளை அடைந்தவனாய் இரண்டாமாண்டு 
அனைவரின் அன்பையும் அடைந்தவனாய் மூன்றாமாண்டு 
இப்படியாய் வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய் 
என் கல்லூரி வாழ்க்கை ....
இரண்டே நாள் கல்லூரி விடுமுறைக்குப்பின் 
மூன்றாம் நாள் முதலே கணினி தொழிலகம் 
ஒன்றில் வேலை
அவசரகால ஆள் எடுப்போ அல்லது அனுபவம் கற்றுதர 
ஆசையோ தெரியவில்லை 
முப்பது நாற்பது நாட்களில் வேறொரு தொழிலகத்தில் நான் 
அங்கும் ஆறு மாதமே (?)
தாவி வந்தேன் நகரத்திற்கு (நரகத்திற்கு..?)
இயந்திரமாய் வாழ்க்கை 
அனைத்தும் இங்கே செயற்கை 
ஏற்றுக் கொண்டேதான் ஆக வேண்டுமா இந்த செயற்கையை..?
யோசிக்கையில் நினைவில் வந்தது... 
தவிப்பாய் "தாய்" முகம் 
தலைப்பிள்ளை உள்ளான் என்ற தன்னம்பிக்கையாய் "தந்தை" முகம் 
ஆசையாய் "தம்பி" முகம் 
பெருமையாய் "நண்பர்களின்" முகம் 
சாதித்து திரும்பி வருவான் என்று காத்திருக்கும் "காதலியின்" முகம்
யோசனையின் முடிவில் நானும் இன்று...
 
 
 
            
        
          
        
          
        

உனக்குள்ளும் நான் உண்டு 
என்னை நீ நினைத்தால்..!
உனக்குள் மட்டுமே நான் உண்டு 
எனக்காய் உன்னை நீ மறந்தால்..!!
                 --கவி
 
 
 
            
        
          
        
          
        

உறங்காமல் விழித்திருக்கும் கண்கள் உனக்கு 
அழகிய கண்களின் உவமை நீ
ஓயாமல் உழைத்திருக்கும் நீ என்னை 
சோம்பேறியாக்கி உன் அருகில் நிற்க வைத்தாய்
இமை இல்லா நீ
என் இமையை மறக்கச் செய்தாய் 
எங்கள்த் தொட்டிக்குள் உன்னை சிறை வைத்ததால்
உன் வாழ்வும் போராட்டமே
எண்ணச் செய்வது என் மனச் சுதந்திரம் 
வேண்டி உனக்கு இந்த சிறை 
மனம் வலித்தது உன் நிலை எண்ணி 
என் சுயநலம் மாற்றியது
என்னை "துரோகியாக" உன்னை "தியாகியாக" 
உன் நிலை எண்ணி சபிக்காதே 
உனக்கு இமை தரா ஆண்டவனை!
சபித்து எரித்துவிடு, உன் சுதந்திரம் பறித்து 
உன் சிறு அசைவையும் ரசிக்கும் என்னை. 
எப்படி இருப்பினும் எனக்கு மன அமைதி தந்தாய் 
ஆனால் என்று உன் சாபம் பலித்து விட்டது 
உன் சிறை என் மனச் சுதந்திரம் பறித்து 
சுமையேற்றி மனம் கலங்க வைத்து மாற்றியது 
என்னை தியாகியாக அல்ல 
மனம் கலங்கும் நல்ல "மனிதனாக." 
                             -- கவி