Thursday, October 29, 2009
மீன்...
உறங்காமல் விழித்திருக்கும் கண்கள் உனக்கு
அழகிய கண்களின் உவமை நீ
ஓயாமல் உழைத்திருக்கும் நீ என்னை
சோம்பேறியாக்கி உன் அருகில் நிற்க வைத்தாய்
இமை இல்லா நீ
என் இமையை மறக்கச் செய்தாய்
எங்கள்த் தொட்டிக்குள் உன்னை சிறை வைத்ததால்
உன் வாழ்வும் போராட்டமே
எண்ணச் செய்வது என் மனச் சுதந்திரம்
வேண்டி உனக்கு இந்த சிறை
மனம் வலித்தது உன் நிலை எண்ணி
என் சுயநலம் மாற்றியது
என்னை "துரோகியாக" உன்னை "தியாகியாக"
உன் நிலை எண்ணி சபிக்காதே
உனக்கு இமை தரா ஆண்டவனை!
சபித்து எரித்துவிடு, உன் சுதந்திரம் பறித்து
உன் சிறு அசைவையும் ரசிக்கும் என்னை.
எப்படி இருப்பினும் எனக்கு மன அமைதி தந்தாய்
ஆனால் என்று உன் சாபம் பலித்து விட்டது
உன் சிறை என் மனச் சுதந்திரம் பறித்து
சுமையேற்றி மனம் கலங்க வைத்து மாற்றியது
என்னை தியாகியாக அல்ல
மனம் கலங்கும் நல்ல "மனிதனாக."
-- கவி
Wednesday, October 28, 2009
Tuesday, October 27, 2009
மனிதன் எங்கே..?
மரம் நடுங்கள் சாலையோரம்
சரிதான் செய்கிறோம்,
முதலில் கூறுங்கள் சாலை எங்கே?
காடு காப்போம் காட்டு விலங்கிற்காக
சரிதான் காப்போம்,
முதலில் கூறுங்கள் காடு எங்கே?
மனிதம் வளர்க்க மனிதநேயம் காப்போம்
சரிதான் காப்போம்,
ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?
--கவி
Monday, October 26, 2009
Friday, October 23, 2009
நட்பாய் மட்டுமே இரு என்றாய்..!
என் சுவாசம்,
உன் கூந்தலின் வாசம் மட்டுமே..!
என் பார்வை,
உன் விழிகளின் வியப்பை மட்டுமே..!
என் செவிகள் உணர்வது,
உன் இதழ்களின் அசைவுகளை மட்டுமே..!
என் உறக்கம்,
உன் உள்ளங்கையில் மட்டுமே..!
நான் உறவாடுவது,
உன் மனதோடு மட்டுமே..!
இவையெல்லாம் நம் நட்பில் கிடைக்குமென்றால்,
உடனே கூறு...
துறந்து விடுகிறேன் இப்பொழுதே
என் காதலை.....!
Wednesday, October 21, 2009
என்ன ஒரு பொருத்தம்..!
என்னவள் என்னிடம் நீட்டினாள்,
அவளின் திருமண அழைப்பிதழ்...
அத்தினத்தை எண்ணி,
என் சிந்தையில்...
நாளை என்னவளுக்கு "திருமணம்"
இன்று நான் தழுவினேன் "மரணம்"
மாலை அவள் கழுத்தில் விழுந்தது "மணமாலையாக"
மாலை என் கழுத்திலும் விழுந்தது "பிணமாலையாக"
அவள் கால்களில் மெட்டி, போகிறாள் "மணமகள் ஊர்வலமாக"
என் கால்களை கட்டி, போகிறேன் நானும் "பிண ஊர்வலமாக"
மணம் முடிந்து, முதல் இரவில் என்னவள் பருகினால் "பால்"
மரணம் முடிந்து, முதல் இரவு கழிந்ததால் நானும் பருகினேன் "பால்"
ஆஹா..!
இருக்கும் பொழுது "இல்லாத பொருத்தம்"
இறந்த பின்தான் "எவ்வளவு பொருத்தம்"..!
விழிகளின் ஒளி
விண்ணில் உள்ள விண்மீன்களை எல்லாம்
ஒன்று திரட்டி ஒளிர செய்தால் கூட...
என்னவளின் இரு விழிகளின்,
ஒளிர்வுக்கு ஈடாகுமா..?
Tuesday, October 20, 2009
Monday, October 19, 2009
வண்ணத்து பூச்சி
செந்நிற ஆடையில்,
நான் கண்டேன் அந்த வண்ணத்து பூச்சியை...
வெண்ணிற ஆடை கொண்டு,
மணக்கோலம் பூண்ட எண்ணினேன்...
காவி நிற ஆடைதான்
உனக்கு சரியானது என்று,
அது கூறி விட்டு பறந்து சென்றது...!
Thursday, October 15, 2009
மகிழ்ச்சி....
உன்னில் நான்
இருக்கிறேனோ இல்லையோ?
அறியாமல்..
மகிழ்ச்சியுற்றது என் மனம்.
காரணம்..!
நீ என்னை
காணும் பொழுது
உன் விழிக்குள்
நான் இருப்பதாலோ ..?
மின்னல் ஒளி இழந்தது...
மின்னலை பார்த்தால்
கண்கள்
ஒளி இழக்கும் என்பார்கள்..
ஆனால்....
அந்த மின்னலும்
ஒளி இழந்தது,
உன்
கண்ணை பார்த்து....
மூன்றாம் பிறை...
முழு நிலவை விட,
மூன்றாம் பிறையை
மிக அதிகமாக நேசிக்கிறேன்...
காரணம்..?
முழு நிலவாக,
உன் முகம்...
மூன்றாம் பிறையாக,
உன் விழிகள் மட்டும்...
என்ன தவம் செய்ய வேண்டும்....?
சுதந்திர பறவையாய்
பறந்து சென்ற என்னை...
உன் விழி ஈர்ப்பு விசைகுள்ளாக்கி,
என் இதய சிறகுகளை ஒடிய செய்து விட்டாய்...!
என்னவென்று சொல்வது...
உன் விழிகளின் வியப்பை...!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை,
என்னால் இயன்ற வரை ......
கயல்களும் உன் விழிகளின் வியப்பை கண்டு
வெட்கி தலை கவிழுமோ...!
என்ன தவம் செய்ய வேண்டும்...?
முத்தை பாதுகாக்கும்
சிப்பியை போல்.....
உன் விழிகளை பாதுகாக்கும்
இமையாக நான் மாற.......?
Subscribe to:
Posts (Atom)