Thursday, October 15, 2009
என்ன தவம் செய்ய வேண்டும்....?
சுதந்திர பறவையாய்
பறந்து சென்ற என்னை...
உன் விழி ஈர்ப்பு விசைகுள்ளாக்கி,
என் இதய சிறகுகளை ஒடிய செய்து விட்டாய்...!
என்னவென்று சொல்வது...
உன் விழிகளின் வியப்பை...!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை,
என்னால் இயன்ற வரை ......
கயல்களும் உன் விழிகளின் வியப்பை கண்டு
வெட்கி தலை கவிழுமோ...!
என்ன தவம் செய்ய வேண்டும்...?
முத்தை பாதுகாக்கும்
சிப்பியை போல்.....
உன் விழிகளை பாதுகாக்கும்
இமையாக நான் மாற.......?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment