
என்னவள் என்னிடம் நீட்டினாள்,
அவளின் திருமண அழைப்பிதழ்...
அத்தினத்தை எண்ணி,
என் சிந்தையில்...
நாளை என்னவளுக்கு "திருமணம்"
இன்று நான் தழுவினேன் "மரணம்"
மாலை அவள் கழுத்தில் விழுந்தது "மணமாலையாக"
மாலை என் கழுத்திலும் விழுந்தது "பிணமாலையாக"
அவள் கால்களில் மெட்டி, போகிறாள் "மணமகள் ஊர்வலமாக"
என் கால்களை கட்டி, போகிறேன் நானும் "பிண ஊர்வலமாக"
மணம் முடிந்து, முதல் இரவில் என்னவள் பருகினால் "பால்"
மரணம் முடிந்து, முதல் இரவு கழிந்ததால் நானும் பருகினேன் "பால்"
ஆஹா..!
இருக்கும் பொழுது "இல்லாத பொருத்தம்"
இறந்த பின்தான் "எவ்வளவு பொருத்தம்"..!

No comments:
Post a Comment