Friday, October 23, 2009

நட்பாய் மட்டுமே இரு என்றாய்..!



என் சுவாசம்,
உன் கூந்தலின் வாசம் மட்டுமே..!
என் பார்வை,
உன் விழிகளின் வியப்பை மட்டுமே..!
என் செவிகள் உணர்வது,
உன் இதழ்களின் அசைவுகளை மட்டுமே..!
என் உறக்கம்,
உன் உள்ளங்கையில் மட்டுமே..!
நான் உறவாடுவது,
உன் மனதோடு மட்டுமே..!
இவையெல்லாம் நம் நட்பில் கிடைக்குமென்றால்,
உடனே கூறு...
துறந்து விடுகிறேன் இப்பொழுதே
என் காதலை.....!

1 comment:

  1. migavum arumai.....

    இவையெல்லாம் நம் நட்பில் கிடைக்குமென்றால்,
    உடனே கூறு...
    துறந்து விடுகிறேன் இப்பொழுதே
    என் காதலை.....!

    aazhamana karuthu irunthalum vali athigam.....

    ReplyDelete